மேலும் நீடிக்கப்பட்டுள்ள அபாய முன்னெச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (09-20-2023) பிற்பகல் 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், களுத்துறை, காலி, மாத்தறை, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் மத்துகமை, இங்கிரிய மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்புநிற முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாத்தறை மாவட்டத்தின், அக்குரஸ்ஸ, பிட்டபெத்தர மற்றும் ஹக்மன பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு நிற முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, இமதுவ, நாகொடை மற்றும் யக்கலமுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு நிற முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.