எரிவாயு ஆலையில் வெடி விபத்து; இருவருக்கு நேர்ந்த கதி
புத்தளம் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆபத்தாக கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
புத்தளம் நைனாமடம் பகுதியிலுள்ள எரிவாயு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்து நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் 40 வயது மற்றும் 24 வயதுடைய இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வெடிப்பு சம்பவம் மோட்டார் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளை புதுப்பிக்கும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை குளிரூட்டலுக்கு பயன்படுத்தப்படும் 5 அடி உயர நைட்ரஜன் அடங்கிய சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த குழாய் இவ்வாறு வெடித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.