விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான பேரீச்சம்பழங்கள்
வத்தளையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பேரீச்சம்பழங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் நடத்தப்பட்ட பரிசோதனையின் போதே காலாவதியான 3,620 கிலோ பேரீச்சம்பழங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட காலாவதியான பேரீச்சம்பழங்களின் பெறுமதி 6.5 மில்லியன் ஆகும். இதனையடுத்து, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் காலாவதியான பேரீச்சம்பழங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
நுகர்வோர்கள் பாதுகாப்பற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினர் மேலும் தெரிவித்தனர்.