மிதமிஞ்சிய உப்பும் நிபுணர்களின் எச்சரிக்கையும்
நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உப்பு எனலாம். இது மிதமிஞ்சினால் உயிருக்கே ஆபத்தை தரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உப்பு உணவின் சுவையை அதிகரிக்கிறது அத்துடன் அளவோடு சாப்பிடும் போது உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. எனினும் உணவில் உப்பின் அளவு அதிகமானால் அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
ஏற்படும் அபாயம்
உடலில் உப்பு கூடும் போது கால்சியம் இயல்பாகவே குறையும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதிக அளவு உப்பு கால்ஷியத்தை உறிஞ்சி விடும். இதனால்எலும்புகள் வலுவிழந்து மூட்டு வலி, ஆஸ்டியோபோரோஸிஸ் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
சிறுநீரக பிரச்சனை
அதிக உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.இதனால் இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்துக்கள் அதிகரிக்கும். அதிக அளவிலான உப்பு சிறுநீரக பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
அதிக உப்பை உட்கொள்வதால், சிறுநீரகங்கள் உடலில் இருந்து திரவங்களை வெளியேற்றுவது கடினமாகி சிறுநீரக பிரச்சனைகளை உண்டாக்குகிறது.உப்பில் இருக்கும் ரசாயன பொருள்கள் உடலில் நீர்ச்சத்து, இரத்தத்தின் அளவு குறையாமல் இருக்கவும், இதயம் சீராக செயல்படவும் மிகவும் அத்தியாவசியமானது என்றாலும் உப்பின் அளவு அதிகரிக்கும் போது இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது.
உடல் பருமன்
உணவில் அதிக உப்பை உட்கொள்வது உடல் பருமனை அதிகரிக்கிறது. உப்பை அதிகமாக உட்கொள்வது உடலில் கலோரிகளை அதிகரிக்கிறது. இது உடல் கொழுப்பை அதிகரிக்கிறது. உப்பு அதிகமாக உட்கொள்வதால் இரைப்பைக் கட்டிகளும் ஏற்படலாம்.
உப்பின் அளவு
ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு தினமும் 2. 3 கிராம் அளவு உப்பு போதுமானது என்கின்றனர் மருத்துவர்கள். தினமும் 5 கிராமுக்கு மேல் உப்பைப் பயன்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்துகின்றனர். ஆனால், நோயாளிகள், உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்து அளவை முடிவு செய்ய வேண்டும்.
குறைவாக எடுத்து கொள்ள வேண்டியவை
எனவே உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு சிறந்தது. உப்பு அதிக அளவில் உள்ள உணவுகளை தொடாதீர்கள். ஊறுகாய், வத்தல் போன்ற அதிக உப்பு உள்ள பண்டங்களை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவான உப்பை சேர்த்து கொள்வதை பழக்கிக் கொண்டால் நீண்ட நாட்கள் உடல் நலத்தோடு வாழலாம்.