சிறுமிகள் சர்ச்சையில் சிக்கிய ரிஷாத்தின் மற்றுமொரு மச்சான்; வெளியான தகவல்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவியின் மற்றுமொரு சகோதரரும் சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறைச்சென்றதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 2007ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு, தண்டனைக்காலம் நிறைவுற்றதன் பின்னர் விடுதலையாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிஷாத் பதியுதீனின் மற்றுமொரு மைத்துனரான மொஹமட் ஹனீஸ் என்பவரே இவ்வாறு தண்டனை பெற்றதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை, ரிஷாத் பதியுதீனின் மாமனார் மீதும் பணிப்பெண்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுமென அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.