தமிழர் பகுதியொன்றில் ஏற்பட்ட அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த யானை!
முல்லைத்தீவு பகுதியொன்றில் யானை புகையிரத்துடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் பிற்பகல் 6.15 மணியளவில் முறிகண்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த உத்திரதேவி புகையிரதத்துடன் மோதியே யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
விபத்தில் சிக்கிய யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதி மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்டமையால், பொலிஸார், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு புகையிரத அதிகாரிகளால் தகவல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.