ஜோசப் ஸ்டாலின் தொடர்பில் டிலான் எம்.பி. முன்வைத்த குற்றச்சாட்டு!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா விமர்சித்துள்ளார்.
அதிபர் – ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
"எமது இராணுவத்தினர் மக்களைக் கொன்றனர் எனக் குறிப்பிட்டு, யாழ்ப்பாணத்துக்குச் சென்று புலிகளுடன் இணைந்து போராடியவர்தான் ஜோசப் ஸ்டாலின். அவர் புலிகளின் கட்சியைச் சேர்ந்தவர்.
அடுத்ததாக மஹிந்த ஜயசிங்க என்பவர் ஜே.வி.பியின் முழு நேர அரசியல் செயற்பாட்டாளர். இவர்கள்தான் கல்விக் கட்டமைப்பைக் குழப்புகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, வரும் 21 ஆம் திகதி 200 மாணவர்களை கொண்ட பாடசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் "பாடசாலைகளின் சாவிகளை ஒப்படைக்குமாறு அதிபர்களுக்கு, பொலிஸார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். வலயக்கல்விப் பணிப்பாளர் தீர்மானமொன்ற எடுக்கும்வரை அதனை ஒப்படைக்கமாட்டோம் என்றும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.