மாலைதீவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள்
Sri Lanka
Maldives
Crime
Drugs
By Viro
124 கிலோ ஹெரோயின் மற்றும் 344 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட "அஷேன் சோன்" என்ற மீன்பிடி கப்பலில் இருந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கவில்லை என்று கூறி மாலைதீவு அரசாங்கம் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.
தெவிநுவர மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த ஐவர் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி மேற்படி போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவரும்போது மாலைதீவு கடலோர காவல்படையினரால் இந்த குழு கைதுசெய்யப்பட்டது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US