வாழைச்சேனையில் பரிதாபமாக உயிரிழந்த விசேட தேவையுடவர் ஒருவர்!
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காயான்கேணி பகுதியில் விசேட தேவையுடவர் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று தினம் செவ்வாய்கிழமை (08-08-2023) இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் காயான்கேணி வட்டவானைச் சேர்ந்த 47வயதான இ.இரத்தினவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று நன்பகல் வேலை அருகில் உள்ள கடற்கரைப் பகுதிக்கு சென்று வீடு திரும்பும் வழியில் இராலோடைக்கும் வட்டவான் ஆகிய இரண்டு கிரமங்களுக்கிடையில் ஊடறுத்துச் செல்லும் ஆற்றினை கடந்து வரும் போது இவர் உயிரிழந்துள்ளார்.
திடிரென அவருக்கு ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக நீரினுள் வீழ்ந்து மூச்சுத் தினறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கினறனர்.
நேரமாகியும் வீடு திரும்பாமை தொடர்பில் உறவினர்கள் தேடிய போது குறித்த ஆற்றுப் பகுதியில் அவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.
மேலும் சடலம் பொலிஸாரின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக உறவினாகள் தகவல் தெரிவித்தனர்.