நுவரெலியா செல்லும் சாரதிகள் அவதானம்
நுவரெலியா பிரதேசத்தில் இந்த நாட்களில் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு செல்லும் வாகங்கள் முன்னோக்கி செல்லும் வாகனங்களை பார்க்க முடியாமல் விபத்துகள் ஏற்படுவதால் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் அப்பகுதி முழுவதும் இருண்ட கால நிலை காணப்படுவதாகவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடர்ந்த பனிமூட்டம்
நுவரெலியா நகர எல்லை , ஹவா எலியா ,பொரலந்தை, உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதி, நானுஓயா, தலவாக்கலை, ஹட்டன் பிரதான வீதி, நானுஓயா ரதல்ல குறுகிய வீதி, நுவரெலியா மீபிளிமான பட்டிப்பொல அணுகு வீதிகள், போன்ற பகுதிகளில் இந்த அடர்ந்த பனிமூட்டம் மற்றும் வீதியில் போனிகல் குதிக்கும் அபாயம் உள்ளதால்,மிகக் குறைந்த வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் வாகன சாரதிகள் ஒவ்வொரு வாகனத்தில் மின்விளக்குகளையும் ஏற்றுமாறு வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.