டக்ளஸ் தேவானந்தா ஒரு சாபக்கேடு ; ஈபிடிபியுடன் தொடர்பை தவிர்த்தால் ஆதரவு
உள்ளுராட்சி சபைகளில் கூடிய வாக்குகளை பெற்றுக்கொண்ட தரப்புக்களே ஆட்சி அமைக்கவேண்டுமென இலங்கை தமிழரசுக்கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் அணி வலியுறுத்திவருகின்றது.
எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக தமிழ் கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து அணியாக சபைகளை கைப்பற்ற முற்பட்டதையடுத்து தமிழரசுக்கட்சி ஈபிடிபி ஆதரவை நாடியுள்ளயுது.
தமிழரசோடு சேர்ந்து பயணிக்க தயார்
இந்நிலையில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொடர்ந்து செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் ஈபிடிபியை கைவிட தமிழரசை கோரியுள்ளார்.
தமிழரசுக்கட்சி ஈபிடிபியுடனான தொடர்பை தவிர்த்தால் அவர்கள் ஆட்சியமைப்பதற்கு தாங்கள் பூரண ஆதரவை வழங்குவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தமிழர் அரசியலில் ஒரு சாபக்கேடு எனவும் செல்வராஜா கஜேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்க மாட்டோம் என உறுதி வழங்கினால் தமிழரசோடு சேர்ந்து பயணிக்க தயார் எனவும் அதற்கு உடன்படாதமையினாலையே கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சு முறிவடைந்ததாகவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.