பிரித்தானியாவை உலுக்கிய இரட்டை கொலை: சிக்கிய 19 வயது இளைஞன்
பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மணியளவில் 2 சிறுவர்கள் கத்தியால் குத்திகொலை செய்யப்பட சம்பவத்தில், சந்தேகத்தின்பேரில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் Brentwood நகரத்தில் கிரவுன் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள Regency கோர்ட் குடியிருப்பின் அருகே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில், இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், முன்னதாக Grays பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரையும், South Ockendon பகுதியைச் சேர்ந்த 21 வயது நபர் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.
இருப்பினும் அவர்கள் இருவருக்கும் இந்த வழக்கில் பிணை கிடைத்துள்ளது, அவர்கள் வரும் நவம்பர் 19-ஆம் திகதி வரை நிபந்தனையின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர். இதேவேளை, Brentwood பகுதியில் இருந்து 40 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து, தற்போது விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் இதுவரையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 4 பேர் எந்த நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 27- ஆம் திகதி (புதன்கிழமை) Orsett, Baker Street பகுதியைச் சேர்ந்த Frankie Watson எனும் 19 வயதான இளைஞனை Southend Magistrates நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவர்மீது 2 கொலை குற்றங்கள், ஒரு கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த குற்றங்களுக்காக வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.