டொலர் தட்டுப்பாடு; பஷிலின் அதிரடி முடிவு
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்துமாறு நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும், எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை டொலர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்த நிதி அமைச்சர், இந்தியாவிற்கான தனது விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் மேலும் கூறினார்.