வைத்தியர் அனில் ஜாசிங்க விடுத்த எச்சரிக்கை!
நாட்டில் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
இயலுமானவரை பொதுமக்கள் வெளியேசெல்லாது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் தெரிவித்தார்.
முக்கிய நகரங்களில் இந்த மோசமான மாசு நிலை
இந்தியாவில் இருந்து வரும் காற்றால், கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, புத்தளம், கண்டி, வவுனியா போன்ற முக்கிய நகரங்களில் இந்த மோசமான காற்று மாசு நிலை பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதோடு இந்த நிலைமையை இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல என குறிப்பிட்ட அவர், குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்தவரை கட்டுப்படுத்தி முகக்கவசத்தை அணிவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்