இவரை தெரியுமா? பதிமன்வயது சிறுவனை தேடும் பொலிஸார்
பன்னிபிட்டிய, கொஸ்கஹஹேன பிரதேசத்தைச் சேர்ந்த கலன மிஹிரங்க என்ற 15 வயது சிறுவன் தொடர்பில் மஹரகமை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறுவனின் தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ள நிலையில் தனது தந்தை மற்றும் சகோதரிரியின் பராமரிப்பில் சிறுவன் வாழ்ந்து வந்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்நிலையில், இவரது தந்தை கடந்த 5 ஆம் திகதி அன்று திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் சகோதரி, சிறுவனை வீட்டில் வைத்துவிட்டு அயல் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவரின் உதவியுடன் தந்தையை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சகோதரியும் தந்தையும் வைத்திய பரிசோதனைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது சிறுவன் வீட்டில் இல்லாததை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து இருவரும் மஹரகமை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் பொலிஸார் சிறுவனை தேடி வருகின்றனர்.