இந்த மூன்று பறவைகள் உங்கள் வீட்டிற்கு வருகிறதா? உங்களுக்குத்தான் அதிர்ஷ்டம்
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வாஸ்து விதிகளை பின்பற்றினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு பெருக தொடங்கும். மேலும் இது எதிர்மறை சக்தியை நீக்கி நேர்மறை ஆற்றலை பரப்ப உதவும்.
அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள சில பறவைகள் உங்களது வீட்டில் முற்றத்திலோ அல்லது கூரையிலோ அமர்ந்திருந்தால் அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
காகம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு காகம் உங்களது வீட்டின் கூறி அல்லது முற்றத்தில் வந்தால் அதனால் உங்கள் வீட்டிற்கு புதிய விருந்தினர்கள் வருவார்கள் என்பதற்கான அடையாளமாக கருதப்படுகிறது. இந்து மதத்தில் காகம் வீட்டிற்குள் வருவது மிகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில், காகம் மூதாதையர்களுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது.
கிளி
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டில் ஒரு கிளி அமர்ந்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது உங்களது வீட்டிற்கு செல்வத்தை கொண்டு வருவதற்கான அறிகுறியாக இருக்கும் என்றும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்கள் வீட்டிலும் வாழ்க்கையில் நிலைத்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்து மதத்தில் கிளி குபேரனுடன் தொடர்புடையது என்பதால், எந்த வீட்டிற்கு கிளி வருகிறதோ அந்த வீட்டில் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது.
ஆந்தை
ஆந்தை மிகவும் அசுபமான பறவையாக கருதப்பட்டாலும், வாஸ்து சாஸ்திரத்தின் படி ஆந்தை உங்கள் வீட்டிற்கு வருவது மிகவும் மங்களகரமானது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தில் ஆந்தை செல்வம் மற்றும் செழிப்பின் இருப்பிடமாக கருதப்படுகிறது. எனவே, எந்த வீட்டிற்கு ஒரு ஆந்தை வந்ததோ அந்த வீட்டில் செல்வமழை பொழியும் என்று கூறப்படுகிறது.