சுகாதார சேவைகள் ஸ்தம்பிதம்; காத்திருக்கும் நோயாளிகள்!
நாடளாவிய ரீதியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் 48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் பல்வேறு சுகாதார சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்துள்ளதால் மருத்திவமனைகளுக்கு சென்ற நோயாள்ர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இன்றும் நாளையும் போராட்டம்
மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய்கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி நாடளாவியரீதியில் அரச தாதிய உத்தியோகத்தர்கள் இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறைபோராட்டம் இன்றும் நாளையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு வவுனியாவிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளதுடன் வவுனியா பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை (10) பணிக்கு சமூகமளிக்காமையினால் வைத்தியசாலையின் சேவைகள் பல ஸ்தம்பிதமடைந்துள்ளது .
குறிப்பாக பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்பட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை எனவே, அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பற்சிகிச்சை நிபுணர்கள், மருந்து கலவைகள் நிபுணர்கள், ECG தொழில்நுட்ப நிபுணர்கள், EEG தொழில்நுட்ப நிபுணர்கள், கண் மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.