சர்ச்சைக்குரிய தடுப்பூசி: 4 அதிகாரிகளுக்கு நீதமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் இறக்குமதி தொடர்பில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில விக்கிரமநாயக்க உட்பட 4 அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களை நவம்பர் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில், சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் உட்பட நான்கு உயர் அதிகாரிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இன்று கைது செய்துள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க, உதவிப் பணிப்பாளர் தேவசாந்த சொலமன், கணக்காளர் (விநியோகம்) நேரன் தனஞ்சய மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவின் பங்குக் கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமரியலில் வைக்கப்பட்டுள்ளனர்.