சென்னை அணியில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தல தோனி! வெளிவரும் தகவல்கள்
அடுத்து நடக்கவிருக்கும் 3 ஐபிஎல் தொடர்களுக்கும் மகேந்திரசிங் தோனியை (M S Dhoni) சிஎஸ்கே அணி தக்கவைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைவராக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள சஞ்சய் கோயெங்காவின் லக்னோ அணியை கே.எல்.ராகுல் த்லைவராக வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, பஞ்சாப் கிங்ஸ் அணி கே.எல் ராகுலை விடுவித்துள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்றின் பிரத்யேக செய்தி தெரிவிக்கிறது. தோனியுடன் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவையும் சிஎஸ்கே தக்கவைக்கிறது. சிஎஸ்கே அணியின் இப்போதைய ஸ்டார் ருதுராஜ் கெய்க்வாடும் தக்கவைக்கப்படுகிறார்.
பிசிசிஐ விதிகளின்படி ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களைத் தக்கவைக்கலாம். பிரித்தானியாவின் ஆல்ரவுண்டர் மொயின் அலியுடனும் சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆங்கில ஊடக செய்தி தெரிவிக்கின்றது. அடுத்த ஐபிஎல் இந்தியாவில் நடைபெறும் என்பதால் இங்குள்ள மந்தமான குழிவுள்ள மைதானங்களுக்கு அவர்தான் தோதுபடுவார் என்று தெரிகிறது.
இதேவேளை வருகின்ற நவம்பர் 30ம் திகதிக்குள் அணிகள் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும். மகேந்திரசிங் தோனி என்பது கிரிக்கெட் சம்பந்தப்பட்டது அல்ல என்பதை ரசிகர்கள் உணர வேண்டும். அவர் ஒரு பிராண்ட், அந்த மதிப்புதான் அவருக்கு உள்ளது, எனவே அவர் 10 பந்தில் 0 எடுக்கிறார் 18 பந்துகள் பவுண்டரி அடிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் முணுமுணுக்கக் கூடாது, எல்லாம் நிறுவனம் மயத்தில் தோனி ஒரு பிராண்ட் நேம் அவ்வளவுதான்.
இதேவேளை தக்கவைக்கப்படும் வீரர்கள் (உத்தேசமாக):
சென்னை சூப்பர் கிங்ஸ்: (CSK) தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி/சாம் கரன்
டெல்லி கேப்பிடல்ஸ்: (DL) ரிஷப் பண்ட், பிரிதிவி ஷா, அக்சர் படேல், ஆன்ரிச் நார்ட்யே.
மும்பை இந்தியன்ஸ்: (MI) ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, பொலார்டு (பேச்சு வார்த்தையில்), இஷான் கிஷன் (ஒருவேளை ரீடெய்ன் செய்யப்படலாம்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: (KKR) சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல்.