யாழ் - நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அலைகடலென திரண்ட பக்தர்கள்!(Photos)
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று கொடியேற்ற உற்சவம் இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
தொடர்ந்து நாகபூசணி அம்பாள் பிள்ளையார் மற்றும் முருகபெருமான் சகிதம் வலம்வந்து வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் நயினை தாயின் கொடியேற்ற திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இன்று ஆரம்பமாகி தொடர்ச்சியாக பதினாறு தினங்கள் இடம்பெறவுள்ள நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய மகோற்சப பெருவிழாவானது, ஜுலை 01 ம் திகதியன்று சப்பரத் திருவிழாவும் ஜுலை 02 ம் திகதியன்று தேர்த்திருவிழாவும் ஜுலை 03 ம் திகதியன்று தீர்த்தோற்சவமும் ஜுலை 04ஆம் திகதியன்று தெப்போற்சவத்துடனும் நிறைவுபெறவுள்ளது.