யாழில் நடைபயிற்சிக்கு சென்றவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
யாழில் இரு தினங்களுக்கு முன் காணாமல்போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் கிணறொன்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் கடந்த 28.09.21 காலை 6.00 மணிக்கு வீட்டில் இருந்து நடைப்பயிற்சிக்காக சென்றவர் காணாமல் போயிருந்தார்.
இதேவேளை இன்றைய தினம் (30) நவாலி பகுதியில் இருந்த கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.