நாளை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகள் விபரம்
சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (04) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் ஏனைய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் எச். டி. குஷான் சமீர அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
விசேடவிடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகள்
அதன்படி நாளை பாடசாலைகள் நடைபெறாத மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் பிராந்தியங்கள் விபரம்,
சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
கேகாலை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
தென் மாகாணம் காலி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
மாத்தறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
மேல் மாகாணம் களுத்துறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்
கொழும்பு மாவட்டம் – ஹோமாகம வலயம்
நாளைய காலநிலையின் அடிப்படையில் மாகாண அதிகாரிகள் வலய பணிப்பாளர்களுக்கு அறிவித்து பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பார்கள் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.