இலங்கையில் வெறிச்சோடிய நகைக்கடைகள்!
நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்க அதிகரிப்பின் காரணமாக நகைக்கடைகள் வெறிச்சோடியுள்ளன.
அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் சிறு நகை கடை உரிமையாளர்கள் உள்ளடங்களாக நகை தொழிலகங்களில் பணிபுரியும் ஊழியர்களும் விற்பனை இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலைவாசி அதிகரிப்பு, பொருள்களுக்கான தட்டுப்பாடு, வருமானம் இன்மையால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமையால் நகை கொள்வனவுகள் பாரிய அளவில் குறைவடந்துள்ளதாகவும் மன்னார் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், நகை விற்பனை நிலையங்களுக்கான மின் கட்டணம் , நீர் கட்டணம் மற்றும் வாடகை பணம் செலுத்துவதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கபப்ட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.