வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் மழை- 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனவும் அத்திணைகள்ம் குறிப்பிட்டுள்ளது.
ஊவா, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதுடன் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் மிதமானது முதல் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. .
எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.