விமானநிலையத்தில் பெரும் தொகை ஆபத்தான பொருட்களுடன் சிக்கிய யுவதி!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இன்று (28) காலை யுவதியொருவர் ஆபத்தான பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 26 வயதான பொலிவியப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொக்கெய்ன் கரைசல்
கைதான பெண் இன்று காலை டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அதேவேளை நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள கொக்கெய்ன் கரைசலில் கொக்கெய்ன் போதைப்பொருளின் செறிவு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுவதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் கையிருப்பு 04 கிலோ 600 கிராம் எடையுடையதுடன் அவற்றின் பெறுமதி 230 மில்லியன் ரூபா அல்லது 23 கோடி ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 500 அமெரிக்க டொலர்களை அவர் பெற்றுக்கொள்ளவிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.