மாரடைப்பு அபாயத்தை எகிற வைக்கும் ஆபத்தான உணவுகள் ; மறந்தும் கூட சாப்பிடாதிங்க!
சமீபத்திய சில வருடங்களாகவே இளைஞர்கள் ஹார்ட் அட்டாக் காரணமாக இறந்து போகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. அதிலும் ஆரோக்கியமான இளைஞர்கள் ஹார்ட் அட்டாக் காரணமாக இறப்பது பலருக்கும் அதிர்ச்சியூட்டும் விஷயமாக இருக்கிறது.
ஆரோக்கியமற்ற உணவுகள், LDL கொலஸ்ட்ராலை எகிற வைத்து இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கின்றன. மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க தவிர்க்க வேண்டிய சில தினசரி உணவுகள் எவை என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
ஆபத்தான உணவுகள்
சர்க்கரை பானங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிப்பதோடு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நாள்பட்ட வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கும் வழிவகுக்கும், இவை இரண்டு முக்கிய மாரடைப்புக்கான முக்கிய காரணிகளாகும். மேலும், சில ஆற்றல் பானங்கள் அசாதாரண இதய துடிப்பை தூண்டும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் நிறைவுற்ற கொழுப்புகள், சோடியம் மற்றும் நைட்ரேட்டுகள் போன்ற ரசாயன பிரிசர்வேடிவ்களால் நிரம்பியுள்ளன. இந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இவை இரண்டும் மாரடைப்புக்கான முக்கிய ஆபத்து காரணிகள்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த மைதா உணவுகளில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லாததால், இரத்த சர்க்கரை அளவு விரைவாக அதிகரிக்கும். வளர்சிதை மாற்றம் பாதித்தல், உடல் எடை அதிகரிப்பு ஆகியவையும் ஏற்படும். மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவு அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. இவை அனைத்தும் இதயப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.
அதிகப்படியான உப்பு உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இதயம் இரத்தத்தை பம்ப் செய்வது கடினமாகிறது. காலப்போக்கில், இந்த கூடுதல் பணிச்சுமை இதயத்தின் தசைகளை சேதப்படுத்தும். இதனால், இதயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
பொரித்த உணவுகள் குறிப்பாக சுட்ட எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், இரத்த நாளங்களை வீக்கப்படுத்தி கொழுப்பின் அளவை அதிகரிக்கும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்குகின்றன. இந்த உணவுகள் உடல் எடை அதிகரிப்பு மற்றும் இதய தமனிகள் பாதிப்புக்கும் பங்களிக்கின்றன.
செயற்கை இனிப்புகள் ஆரோக்கியமானவை என்று சந்தைப்படுத்தப்பட்டாலும், சில செயற்கை இனிப்புகள் குடல் ஆரோக்கியத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் சீர்குலைத்து, இதய செயல்பாட்டை பாதிக்கும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். அவை பசி சமிக்ஞைகளை சீர்குலைப்பதன் மூலம் மறைமுகமாக அதிகமாக சாப்பிடுவதை ஊக்குவிக்கலாம்.
நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள பால் பொருட்கள் கொழுப்பின் அளவை அதிகரித்து இதய தமனிகளில் அடைப்பு உருவாவதற்கு பங்களிக்கும். இது இதயம் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. இதய மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கலாம்.