சென்னையில் கொரோனா உயிரிழப்பு; இலங்கையில் PCR பரிசோதனை
புதிய கொவிட்-19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் சுகாதார அமைச்சகம் சில மருத்துவமனைகளில் PCR பரிசோதனையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
PCR பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள், தற்போது கொவிட் -19 நோயாளிகளைக் கண்டறிய அதிக எச்சரிக்கையுடன் உள்ளதாக (28) இன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அதோடு, காய்ச்சலுக்கு அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகளின் கண்காணிப்பை அதிகரிக்க மருத்துவமனைகளுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், ஆனால் உடனடியாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்றும் டாக்டர் ஜாசிங்க மேலும் கூறினார்.
அதேவேளை சென்னையில் இன்றைய தினம் புதிய கொவிட் 19 தொற்றால் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.