கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்து
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 5,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது வீரியம் குறைந்த கொரோனா தான் என்றாலும், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் தொற்று அறிகுறி இருப்பவர்களிடம் இருந்து தள்ளி இருக்குமாறும், பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் பொது சுகாதாரத்துறையில் இருந்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி, உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு ச்ல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நெரிசல் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளைச் சில நாட்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தமிழகப் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.