சர்ச்சைக்குரிய காணொளி ஜோடிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை!
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பலங்கொடை – பஹந்துடாவ நீர்வீழ்ச்சி அருகே ஆபாசமாக நடந்துகொண்ட இருவருக்கும் 03 மாதகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பில் பலங்கொடை நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்துடன் குறித்த இருவருக்கும் தலா 10800 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் காலி எல்பிட்டிய பகுதியை சேர்ந்த 24 வயது பெண் மற்றும் மஹரகம பகுதியை சேர்ந்த 34 வயது ஆண் ஆகிய இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் குறித்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.