மகிந்த மேடையில் சர்ச்சை கருத்து ; விமல் வீரவங்ச குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பொன்றின் போது, விமல் வீரவங்ச வௌியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீதிமன்றில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குறிப்பிட்ட உரை அடங்கிய இறுவெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அதனை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ்.போதரகம, அவர் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.