இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்தியர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, கடற்றொழில் ஈடுபட்ட, 30 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த இந்திய கடற்றொழிலாளர்கள், இன்று மாலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடி
இராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 4 படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே அவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.