மருத்துவமனையில் காதல் ஜோடி செய்த முகம் சுழிக்கும் செயல் ; வெளியான வீடியோவால் வெடித்த சர்ச்சை
மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், சில ஜோடிகள் அநாகரிக செயல்களில் ஈடுபடும் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
மருத்துவமனையின் காத்திருப்பு பகுதியில் காதலர்கள் அநாகரிகமாக செயற்பட்டது ஒரு வீடியோவில் பதிவாகியுள்ளது.

விரிவான விசாரணை
மற்றொரு வீடியோவில், பூங்கா பகுதியில் புதர்களுக்கு பின்னால் ஒரு ஜோடி அநாகரிக செயல்களில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பூபேந்திர சிங், மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டார். இதுபோன்ற செயல்கள் மிகவும் அநாகரீகமானவை என்று அவர் கண்டித்ததுடன், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்குச் சம்மன் அனுப்பப்படும் என்றும், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாக்டர் சிங் உறுதியளித்துள்ளார்
. இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு ஏஜென்சியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.