நாட்டின் நெருக்கடியால் பசில் போட்ட இரகசியத் திட்டம்; பதவி விலகுகின்றாரா கோட்டாபய?
நாட்டில் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலகுவார் என பசில் ராஜபக்ச கணக்கிட்டுள்ளதாக விமர் வீரங்க தெரிவித்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்த்தினை பயன்படுத்து பசில் ராஜபக்க்ஷ அரச ஆட்சியை தனது கையில் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா என ஆராய்து வருவதாகவும் அவர் கூறினார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில் செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் மூலோபாயத்திற்கமைய இலங்கையை வழிநடத்துவது குறித்தும் பசில் சிந்தித்து வருதாக தெரிவித்த விமல் வீரவங்ச, நாடு வங்குரோத்தடைந்து விட்டது.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அமைப்பதற்கு உருவாக்கப்பட்ட குழுக்கள் பயனற்றது எனவும் சாடினார். நாடு ஒரு போதும் மீண்ணெடழுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும், நாட்டின் வங்குரோத்து நிலைமையை பயன்படுத்தி அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் அவசியமான முறையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கே பசில் ராஜபக்ஷ முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
பசில் ராஜபக்ஷவை விரட்டியத்தால் மாத்திரமே நாட்டின் தற்போதைய நிலைமையை தவிர்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாதம் இரண்டு அமெரிக்க இராஜதந்திரகள் நாட்டிற்கு வருகின்றதாக தெரிவித்த விமல், . நாட்டில் நெருக்கடியை தீவிரப்படுத்தி மக்களை வேறு பக்கம் திசை திருப்பிவிட்டு இந்து அமெரிக்க முலோபாயத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பசில் இறங்கியுள்ளதாகவும் அவர் சாடினார்.
இதற்காகவே தங்களை பதவியிலிருந்து நீக்கியதாக தெரிவித்த விமல் வீரவங்ச, பசில் என்பவர் அமெரிக்காவுக்காக வேலை செய்யும் ஒருவர் என மேலும் தெரிவித்துள்ளார்.