நாட்டின் நிலமை எத்தியோப்பியா சோமாலியாவை விட மோசமானது!
அரசாங்கம் மருந்துகளை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என்றால், பிரச்சினையை மறைக்காமல், பொதுமக்களின் பாதுகாப்புக்காக மருந்துக ளுக்கான மனிதாபிமான உதவியைப் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும் என சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகையில்,
சமீபகால வரலாற்றில் இலங்கையில் ஏற்பட்டதுபோல மிகப்பெரிய நெருக்கடிகள் எத்தியோப்பியா, சோமாலியா, வடகொரியா, உக்ரைன் போன்ற நாடுகளில் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் மருந்தகங்களுக்கு மருந்துகளை வழங்கும் 60% களஞ்சிய சாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ளவை 4 முதல் 6 வாரங்களில் மூடப்படும் என்றும் அவர் கூறினார்.
மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையால் வேண்டுமென்றே இந்த நிலைமை உருவாக்கப்பட்டதாகவும் அவர் சாடினார்.
அத்துடன் , மருந்து ஏகபோகமும், ஒழுங்குமுறை மாஃபியா என்றழைக்கப்படுவதே இந்தத் தாமதங்களுக்கு முக்கிய காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.