"நாடு அழகாக உள்ளது,செயற்பாடுகள் தான் மோசம்"....அதிருப்தியில் வெளிநாட்டவர்கள்
இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்கள், நாடு நன்றாக இருந்தாலும், செயல்திறன் மிகவும் மோசமாக இருப்பதாக கவலை தெரிவித்தனர்.
புகையிரத நிலைய அதிபர்களின் கோரிக்கைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை கண்டி புகையிரத நிலையத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர்.
ரயில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாரிய சேதமும் ஏற்பட்டது. புகையிரத நிலைய அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பதுளை மற்றும் கண்டி செல்லும் அனைத்து ரயில்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இந்த தாக்குதலை நடத்தினர். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு 500 பேர் வரை திரண்டதுடன் கண்டி பொலிஸார் சிலர் தலையிட்டு அவர்களை கட்டுப்படுத்தினர். இந்த மக்களை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் ஊடாக அவர்களது இடங்களுக்கு அழைத்து வருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, புகையிரதத்தில் மலையகத்திற்கு வருகை தந்த பெருமளவிலான வெளிநாட்டவர்களும் அசௌகரியங்களை அனுபவித்தனர். இலங்கை அழகான நாடாக இருந்தாலும், மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வெளிநாட்டவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.