இலங்கையின் சுதந்திர விழா செலவு; கோட்டா ரூ.9.5 கோடி; ரணில் ரூ.40 கோடி !
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமையிலான அரசாங்கம் அதிகளவிலான தொகையை செலவிட்டுள்ளதாக ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக இருந்த 2022 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக 950 இலட்சம் ரூபா அல்லது 9.5 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பணவீக்கம் அதிகமாக உள்ளதால் பெரும் செலவு
இந்த நிலையில் ரணில் அரசாங்கம் வருட சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக 40 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் ஐலண்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளதால் பெரும் செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐலண்ட் பத்திரிகை வெளியிட்ட தகவல்களின் படி கடந்த வருடங்களில் சுதந்திர தின விழாக்களுக்காகச் செய்யப்பட்ட செலவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
2021 இல் 80,662,000.36
2020 இல் 63,214,561.99
2019 இல் 68,130,091.15
2018 இல் 86,805,319.35 செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.