கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வோருக்கான விசேட அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகளின்றி சிரமப்படும் மக்களுக்கு இலவச போக்குவரத்து சேவையை வழங்குமாறு பிரதமர் தெரிவித் துள்ளார்.
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்குப் போக்குவரத்து வசதி யற்ற மக்களுக்காக 50,000 இலவச பயணச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஊபர் ஸ்ரீலங்கா நிறுவனம் ஆகியன உடன்பாடு தெரிவித்துள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் கொவிட் சிகிச்சை பணிகளில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்காக இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள இலவச போக்குவரத்து சேவை திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அறிவிக்கும் கூட்டம் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிலையில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்கவின் தலைமையில் ஊபர் ஸ்ரீலங்கா மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் இதன்போது குறித்த திட்டம் தொடர்பில் பிரதமருக்கு விளக்கமளித்தனர். கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு இரவு பகல் பாராது சேவை செய்யும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் ஆகியோரது சேவையைப் பாராட்டிய பிரதமர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஊபர் ஸ்ரீலங்கா நிறுவனம் ஆகியவற்றின் இந்த இலவச போக்கு வரத்து சேவையை அவர்களது சேவைக்கான மரியாதையாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
மக்களின் உயிரைக் காப்பதற்குத் தடுப்பூசி ஏற்றும் செயற் திட்டத்தைப் பலப்படுத்த வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு வருகைதருவதற்குப் போக்கு வரத்து வசதிகளின்றி சிரமப்படும் மக்களுக்கு இலவச போக்கு வரத்து சேவையை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார்.