மாட்டு தொழுவத்தில் கொரோனா சிகிச்சை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்ற நம்பிக்கையில், மாட்டு சாணம், கோமியம் பருகுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பில் அதிகளவானோர் கவனத்தை செலுத்தியுள்ளனர்.
இதன்காரணமாக, மாடுகளை பராமரிக்கும் இடமொன்று கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம், குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டம் திடோடா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
நோயாளிகளுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாதவாறு கொரோனா சிகிச்சை மையத்தை சுற்றி, வைக்கோல் நிரப்பி உள்ளதாக கொரோனா சிகிச்சை மைய இயக்குநர் ராம்ரத்தன் மகராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், வேதலக்ஷனா பஞ்சகாவ்யா ஆயுர்வேத கொரோனா தனிமைப்படுத்தும் மையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தில் அனுமதி இலவசம்.
அத்துடன், பஞ்சகாவ்யா ஆயுர்வேத தெரபியை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு நோயாளிகளுக்கு கோமியம், நெய் மற்றும் பசும்பாலில் இருந்து தயாரித்த மருந்துகளையும், மாட்டு சாணம் போட்டு விளைவிக்கப்பட்ட உணவு தானியங்களை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.