பொலிஸ் காவலில் உயிரிழந்த நபருக்கும் கொரோனா
பொலிஸ் காவலில் உயிரிழந்த சந்தேக நபரின் பிரேத பரிசோதனை அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் மத்துகம பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்சிருந்தார்.
பின்னர் சந்தேகநபர் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வெத்தேவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யடதொலவத்தை பகுதியில் வசிக்கும் 40 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டபோது, அவரது உடல் நிலை சீராக இல்லாத காரணத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தனிநபருக்கு வெளிப்புற அல்லது உள் காயங்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.