யாழில் வழுக்கி விழுந்து உயிரிழந்தவருக்கு கொரோனா
யாழில் வழுக்கி விழுந்த வயோதிபர் ஒருவர் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் குச்சம் ஒழுங்கை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செங்கல்வரதராசா சக்திவேல் (வயது- 76) என்பவர், நேற்று (24), வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.