இலங்கையை மீண்டும் தாக்கும் கொரோனா; இருவருக்கு நேர்ந்த சோகம்!
கொரோனாவின் அதிகரிப்பால் இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் கடந்த 27 ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மற்றைய நபர் 28 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
கொவிட் தொற்றுநோய் மீண்டும் நாடு முழுவதும் பரவும் அபாயம் இருப்பதாகவும், குறிப்பாக முகமூடி அணிந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் பொருத்தமானது என்றும் மரண பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை வட்டாரங்களின்படி கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊழியர்களும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.