கொரோனா நிலமை! இலங்கை குறித்து வந்த எச்சரிக்கை
இலங்கையில் நாளாந்தம் சுமார் இரண்டாயிரம் பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு வருகின்றதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,
"இலங்கையில் தற்போது இனங்காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. சரியான தரவுகள் ஊடகங்களில் வெளியாகாவிட்டாலும் நாளாந்தம் 2 ஆயிரம் வரையிலான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றதாகவும் அவர் கூறினார்.
நாளாந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதையடுத்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதனால் வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன.
அதேபோன்று அநேகமான சிகிச்சை மத்திய நிலையங்களிலுள்ள இடவசதி நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த காலங்களில் செயற்பட்டு வந்த அநேகமான சிகிச்சை மத்திய நிலையங்கள் மீணடும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமை எதிர்காலத்தில் சுகாதாரத் துறையினரால் சமாளிக்க முடியாத அளவுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கலாம் எனவும் தெரிவித்த அவர்,
தற்போதுள்ள நிலைமை எதிர்காலத்தில் மேலும் தீவிரமடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் கூறினார்.