திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றவர்களில் 19 பேருக்கு நேர்ந்த நிலை!
குருநாகலில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றவர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுத்தாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திருமண நிகழ்வு குருநாகல் குளியாப்பிட்டி, கரகஹகெதர பிரதேசத்திலுள்ள மண்டபமொன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 35 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போதே 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.