தலைமன்னாரில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 மாணவர்களுக்கு கொரோனா!
தலைமன்னார் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களே இன்றைய தினம் (01) தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
இதேவேளை தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உட்பட 50 பேரிடம் பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போதே 12 மாணவர்கள், பெற்றோர்கள் 3 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு தலைமன்னார் வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த மாணவருடன் தொடர்புடைய மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போதே இவ்வாறு 12பாடசாலை மாணவர்கள் உட்பட15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.