பொதுமன்னிப்பு விடயத்தில் சர்ச்சை: நாமல் வெளியிட்ட கருத்து
வெசாக் பண்டிகையின் போது, வழங்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கைதி ஒருவருக்குரிய மன்னிப்புக்கு, பொறுப்பேற்கத் தவறியதாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தனது சொந்தக் கையால் செய்யப்பட்ட தவறுக்காக, அரசு அதிகாரிகளையோ அல்லது சிறைச்சாலைகளையோ குற்றம் சாட்ட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கடமை
அதேநேரம், ஒரு நிர்வாக ஜனாதிபதி தனது கையொப்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் கூற முடியாது என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கையெழுத்திடும் விடயங்களை புரிந்து கொள்ளாவிட்டால், அது, நாட்டின் பாதுகாப்பு இராஜதந்திரம் மற்றும் முக்கிய ஒப்பந்த விடயங்களில், முழு நாட்டையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது என்றும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமன்னிப்பு தொடர்பில், நீதி அமைச்சகம் குறித்த பட்டியலுக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், கையெழுத்திடுவதற்கு முன்னர், உள்ளடக்கங்களை மதிப்பாய்வு செய்து புரிந்துகொள்வது ஜனாதிபதியின் கடமை என்றும் நாமல் ராஜபக்ச தமது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.