தொடரும் போராட்டம்; ஏமாற்றத்துடன் திரும்பும் நோயாளர்கள்!
சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று இரண்டாவது நாளாகவும் நாடாளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தாதியர்கள், வைத்திய ஆய்வு கூட நிபுணர்கள், மருந்தாளர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் நாளாந்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ள பாரிய சிரமத்துக்கு முகம்கொடுத்தனர்.
எனினும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றதாக தெரிவிக்கப்படுகின்றபோதும், மருந்து வழங்கும் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டதனால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
அதேவேளை ஏழை நோயாளிகள் நீண்ட தூரத்திலிருந்து வந்தும் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் நோயாளிகளுக்கான அனுமதி குறைக்கப்பட் டுள்ளதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


