கோட்டாபய தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்; விமல்வீரங்ச!
கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி கோட்டாபய தப்பியோடியிருக்காவிட்டால் அடித்துப் படுகொலை செய்திருப்பார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்குள் வைத்து கோட்டாபய ராஜபக்சவைக் கொல்வதற்கான ஒரு சதித்திட்டம் இருந்தது உண்மை என தெரிவித்த அவர், பாதுகாப்பு அதிகாரிகளே அந்தத் திட்டத்தை வகுத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் போது வெற்றிகரமாகச் செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் தோல்வியடைந்தது எப்படி? கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து தப்பியோடிய அன்று நடந்தது என்ன? அவரைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டப்பட்டதா?அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது எப்படி? என்ற கேள்விகளுக்கான பதில்களை வழங்கிய போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கோட்டாவை கொல்ல சதித்திட்டம்
கோட்டாபய தோல்வியடையப் பல காரணங்கள் உண்டு.ஒன்று ராஜபக்ச குடும்பம். மற்றது அவரின் சகாக்களே அதற்கு காரணமாக அமைந்திருந்ததாகவும் விமல் கூறியுள்ளார்.
அதிலும் பஸில் போன்றவர்கள் கோட்டாபயவை பிழையாக வழிநடத்தியமையே அவரது தோல்விக்குப் பிரதான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜனாதிபதி செயலாளராக இருந்த பீ.பீ.ஜயசுந்தரவின் தாளத்துக்குக் கோட்டாபய ஆடியமையும் அவரின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றும் விமல் தெரிவித்தார். அடுத்தது அமெரிக்காவும் அவரின் தோல்விக்கு ஒரு காரணம்.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றதன் பின் அமெரிக்காவில் போய் பிள்ளைகளுடன், பேரப்பிள்ளைகளுடன் கடைசிக் காலத்தைக் கழிக்க வேண்டும் என்று விரும்பினார் கோட்டாபய. இதன் காரணமாகவே அவர் அமெரிக்காவை அதிகம் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
டப்ள் கேம் ஆடிய அமெரிக்கா
அத்ற்காகவே கோட்டாபய அமெரிக்கத் தூதுவருடன் நல்ல உறவைப் பேணி வந்தபோதும், அமெரிக்கா டப்ள் கேம் ஆடியது. ஒருபுறம் கோட்டாபயவுடன் அமெரிக்கத் தூதுவர் இருப்பது போல் காட்டிக்கொண்டார்.
மறுபுறம், அவரைப் பதவி இறக்குவதற்காக வேலையை செய்ததாகவும் விமல் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் 9ஆம் திகதி காலை ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோட்டாபய தப்பியோடிய அன்று அவரை ஜனாதிபதி மாளிகைக்குள் வைத்தே கொல்வதற்கான ஒரு சதித்திட்டம் இருந்தது உண்மை.
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே நின்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது உடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடு பற்றிக் கேட்டபோது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என அவர்கள் கூறுகையில், அருகில் இருந்த ரிவி ரிமோட்டை எடுத்து ரிவியைப் கோட்டாபய போட்டுள்ளார்.
அந்தவேளை போராட்டக்காரர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வருவது ஒரு தனியார் சேனலில் காட்டப்படுகின்றது. ஆனால், பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் கோட்டாபயவிடம் பொய் கூறியதாகவும் விமல் வீரவங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொலைக்காட்சியில் போராட்டக்காரர்கள் உள் நுழைச்வதை பார்த்ததும்தான் கோட்டாபய பின்வாசலால் தப்பியோடினார். இல்லாவிட்டால் அவர் சிக்கி இருப்பார். போராட்டக்காரர்களால் அவர் அடித்துக் கொல்லப்பட்டிருப்பார்.
அவரைக் கொல்வதற்காக வகுக்கப்பட்ட திட்டம்தான் அது என்றும் விமல் வீரவங்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. .