டக்ளஸை கடற்றொழில் அமைச்சராக நியமித்ததில் சதி? மனோ
டக்ளஸ் தேவானந்தாவை (Douglas Devananda) கடற்றொழில் அமைச்சராக நியமித்ததில் சதி இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று திங்கட்கிழமை ( 18 ) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அவருக்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மீனவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள், இந்நிலையில் யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்தது. வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு உள்ள தடையை அகற்ற வேண்டும் என மனோ கோரியுள்ளார்.
இலங்கை கடல்வளத்தை இந்திய மீனவர்கள் 30 வருடகாலமாக உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தை பயன்படுத்திய ஓர் தலைமுறையே உருவாகி விட்டது. இந்தியாவில் கூட மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலை இருக்கும் நிலையில் நமது நாட்டின் எல்லைக்குள் வருவதும் பிரச்சினைக்குரிய விடயம்.
இதனை வெறும் மீனவர்கள் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் தமிழர்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களை கோர விரும்புகிறேன் என்றார்.