செஞ்சோலை படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல்
செஞ்சோலை படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் 53மாணவியர்களும், நான்கு பணியாளர்களும் படுகொலைசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டுப்பகுதியில் இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் உறுப்பினர் சிவபாதம் குகநேசன் மற்றும் வள்ளிபுனம் பகுதி இளைஞர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு, சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.