இந்திய இராணுவத்தின் மிலேச்சத்தனமான படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தல்
யாழ்.கொக்குவில் பிரம்படி படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தல் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பரேஷன் பவன் நடவடிக்கை
1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய இராணுவத்தினரின் ஒப்பரேஷன் பவன் நடவடிக்கையின் மூலம் பிரம்படியில் இரண்டு தினங்களில் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு துாபி முன்பாக, இன்றைய தினம் பிரதேச மக்களினால் நினைவேந்தல் நடத்தப்பட்டது.
இந்திய படைகளின் கொல்லப்பட்ட 50 க்கு மேற்பட்ட மக்களின் நினைவாக
ஈகைச் சுடரேற்றப்பட்டு மலர் வணக்கம் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்பட்டது குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.